கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபையின் 46 ஆவது சபை அமர்வு கௌரவ தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களின் தலைமையில் 29.12.2021ஆம் திகதியன்று இடம்பெற்றது.
இவ்வமர்வில் உரையாற்றிய கௌரவ தவிசாளர் அவர்கள் கடந்த 45ஆவது சபை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியமை தொடர்பான விபரங்களையும், இதற்கு மேலதிகமாக இம்மாதத்தில் இப்பிரதேசசபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பிரதேசசபைக்கென தேடிப்பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்கள், வறுமான மேம்பாட்டு மூலங்கள் மற்றும் இதர திணைக்களங்களோடும், முக்கிய அமைச்சுக்களோடும் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.




No comments:
Post a Comment